முத்தலவை பயன்படுத்த மறுத்த கல்ப் விமான சேவை!
கல்ஃப் விமான சேவைகள் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கல்ஃப் விமான நிறுவனங்களுக்கு மத்தல விமான நிலையத்தை பயன்படுத்துமாறு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்
அழைப்புக்கு எவ்வித பதிலும் அனுப்பவில்லை
நாங்கள் அவர்களுக்கு இந்த விமான நிலையத்தை பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை யாரும் அதற்கு முன்வரவில்லை.
தற்போது எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு தேவையானபோது இந்த விமான நிலையத்தை பயன்படுத்துமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளோம்.
இருப்பினும் அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் அல்லது ஆர்வமும் கட்டவில்லை. இதற்கான முக்கிய காரணம் அவர்களின் முழுமையான செயல்பாடுகளை இங்கே மாற்றுவதற்கு தேவையான திறன் இங்கு இல்லாதது.

அவை பெரிய விமான சேவைகள் என்பதால் அவற்றை எளிதில் மத்தலவுக்கு மாற்ற முடியாது. மத்தல என்பது சுமார் ஒரு மில்லியன் பயணிகள் திறன் கொண்ட விமான நிலையமாகும்.
தேவைப்பட்டால் எரிபொருள் நிரப்பு மற்றும் போக்குவரத்துக்காக இலவச தரையிறக்கம் மற்றும் நிறுத்தும் வசதிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தது.
நாங்கள் அனுப்பிய அழைப்புகளுக்கு எந்த பதிலும் இல்லை.நன்றி தெரிவித்திருந்தனர். மேலும் கல்ஃப் பிரதிநிதிகள் குழு கலந்துரையாடலுக்காக இலங்கை வந்ததாக வெளியான ஊடகச் செய்திகளும் உண்மையில்லை என குறிப்பிட்டிருந்தார்.