பசுமை அமைதி விருதுகள் விழா நாளை வீரசிங்கம் மண்டபத்தில்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகளை வழங்கும் பரிசளிப்பு விழா நாளை 29ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கடந்த ஆண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள் சூழலியல் ஆசான் க.சி.குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகளும், 2024ஆம் ஆண்டின் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளர் தாலகாவலர் மு.க.கனகராசா ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
வீட்டுத்தோட்டப்போட்டி
மேலும், இவ்விழாவில் 2024ஆம் ஆண்டில் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாணாக்க உழவர் மதிப்பளிப்பும், தாவரங்களை அடையாளம் காணும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாவராவதானி மதிப்பளிப்பும் இடம்பெறவுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் யோ. நந்தகோபன் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
கலந்து கொள்ளவுள்ளவர்கள்
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரனும், வடக்கு மாகாணத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எந்திரி ச.சர்வராஜாவும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இலங்கையில் சுற்றுச்சூழல் சார்ந்து வழங்கப்பட்டு வரும் விருதுகளில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்ற பசுமை அமைதி விருதுகள் முன்னிலை விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
