யாழில் இடம்பெற்ற மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வு (Photos)
முஸ்லிம் வர்த்தகர்களின் நிதி அனுசரணையில், மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வானது யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.
யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.க. மகேசன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன், யாழ் மாநகர ஆணையாளர் த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் நல்லிணக்க இப்தார் நிகழ்வில் விசேட உரைகளை மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) , மௌலவி ஏ. எம். ரழீம், மௌலவி ஏ.டபள்யூ. பி. அன்பர் (நஜாஜி) உள்ளிட்டோர் வழங்கியிருந்தனர்.
ஏற்பாட்டுக்குழு சார்பில் யாழ். முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் எம்.எம்.எம். நிபாஹிர் தலைமை உரையினை வழங்கியிருந்தார்.
மேற்படி இவ் நல்லிணக்க இப்தார் நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பிரதேச செயலக அதிகாரிகள்,
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். சுகர்தன், கிராம அலுவலர்கள்,
அரசியல் பிரமுகர்கள், யாழ் மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள்,
யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி மற்றும் கதீஜா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள்,
முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜே 88, ஜே 85 கிராமங்களைச்
சேர்ந்த இந்துமத சகோதரர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்
உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






