பணத்திற்காக பாட்டியை கொடூமாக கொலை செய்த பேரன்
காலி, பிடிகல பிரதேசத்தில் பணத்திற்காக பாட்டியை கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
87 வயதான பாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி கைகளை கட்டி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் பாட்டியிடம் இருந்த 4340 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற பேரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாட்டி பணத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு இடுப்பில் மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேகநபர் பணத்தை திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிடிகல தலகஸ்வல பகுதியைச் சேர்ந்த ஜி. கமலாவதி என்ற வயோதிப பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
