பத்து நாட்களில் 109 பேரை பலியெடுத்த கோவிட் வைரஸ்
நாட்டில் கடந்த பத்து நாட்களில் 109 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்னர்.
இதன்படி கோவிட் தொற்றாளர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764ஆக காணப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 655 ஆக காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக கோவிட் மரணங்களின் சடுதியாக அதிகரித்த நிலையில் பத்து நாட்களுக்குள் 109 பேர் மரணமடைந்தனர்.
இதனடிப்படையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில் நேற்று மாத்திரம் 19 பேர் உயிரழந்துள்ளனர்.
நாள் ஒன்றில் பதிவாகிய அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.