அரசாங்கத்திற்குள் உருவாகும் கோவிட் வைரஸ் கொத்தணி! ஜேவிபி எச்சரிக்கை
ஆளும் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் கோவிட் வைரஸ் கொத்தணி ஏற்படும் நிலை குறித்து ஜேவிபி இன்று எச்சரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக ஆசிரியர் கொத்தணி குறித்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், ஒரு சில அமைச்சர்கள் கோவிட் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் அரசாங்க கொத்தணி குறித்து அச்சம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அமைச்சர் விமல் வீரவன்சவும் அவரது சில பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், அரசாங்க அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு போராட்டங்கள் காரணமா? என்று விஜித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.