விலங்குகளுக்கும் கோவிட் தடுப்பூசி - கண்டுபிடிப்பில் ரஷ்யா
உலகம் முழுவதும் பரவி வரும் அசாதாரண சூழ்நிலையில் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன .
உலகம் முழுவதுமே இன்னும் பல கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கின்றனர். சமீபத்தில் மனிதர்களை போல விலங்களுக்கும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணிகளான நாய், பூனைகளுக்கும் வனவிலங்குகளான சிங்கம், புலி போன்றவற்றிற்கும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் கோவிட் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டிருந்தது. இதன் அடிப்படையில் விலங்குகளுக்கு கோவிட் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் பாதிகாக்கும் கார்னிவக்-கொவாக் என்ற தடுப்பூசியை ரஷியா வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,