இலங்கை மக்களுக்கு முதல் தடவையாக இந்தியாவின் எரிவாயு! ஆறு வாரங்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு
நிலவும் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இந்தியாவில் இருந்து முதல் முறையாக உள்நாட்டு எரிவாயுவை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த வாரம் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கூட்டமொன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது தமது நிறுவனம் தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தைப் பெற்றால், சந்தைத் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்யும் வகையில் விநியோகத்தை அதிகரிக்க முடியும் என்று லிட்ரோ அதிகாரிகள் அமைச்சரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் செயற்பாட்டை விரைவுபடுத்த இந்திய உயர்ஸ்தானிகரகம், துரிதமாக செயற்படுவதாக அமைச்சர் சேமசிங்க குறிப்பிட்டார்.
இதன்படி கொள்முதல் செயல்முறை அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இது அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை லிட்ரோ அதிகாரிகளின் தகவல்படி, எரிவாயு பற்றாக்குறை ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri
