தமிழர் தரப்பின் அழுத்தம்! முறியடிக்கப்பட்ட அநுர அரசாங்கத்தின் காணி அபகரிப்பு திட்டம்
வட மாகாணத்திலுள்ள 4 மாவட்டங்களின் இருக்க கூடிய காணிகளை அரசக்காணியாக அபகரிக்கப்பதற்குரிய வர்த்தமானி அரசாங்கத்தால் மீளப்பெற்றுள்ளமையானது பெரும் வெற்றி என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்றையதினம்(27) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ,
“அந்த வகையில் நாடாளுமன்றத்தில் இதனை கொண்டுவந்து பாரிய அழுத்தத்தை எற்படுத்துவதற்கு பலர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
அதில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேணை கொண்டுவந்தபோது அதனை வழிமொழிந்து அதனை ஆதரித்த இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு நன்றியைத் தெரிவிக்கொள்கின்றேன்.
ஏனைய தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றியைக் கூறுக்கொள்கின்றேன்.
நாங்கள் தமிழ்த்தேசிய பேரவையாகக் கொழும்பில் இருக்கக் கூடிய வெளிநாட்டு தூதரங்களுக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் வர்தகமானியை மீளபறவைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம்.
நாடாளுமன்றத்தில் இவற்றை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த அழுத்தங்களை வழங்காது விட்டால் இதனைச் செய்திருக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
