வெளிநாடு செல்ல முற்பட்ட இலங்கையர்களுக்கு கோவிட் - யாழில் 7 பேர் அடையாளம்
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் 13 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் வெளிநாடு செல்வதற்காக தயாரானவர்கள் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொண்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 13 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், வைத்தியசாலையின் ஊடாக பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் கடவுச்சீட்டு பெற்றுவதற்கான பரிசோதனை மேற்கொண்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கோவிட் தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குப்பிளான் கிராமத்தினைச் சேர்ந்த பெண் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan