கடந்த நான்கு நாட்களில் கொழும்பில் ஏற்பட்ட மாற்றம்!
கொழும்பு மாநகரில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் கோவிட் தொற்றால் எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகக் கொழும்பில் ஐந்து நோயாளிகளே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் நாங்கள் 220 பி.சி.ஆர். சோதனைகளையும், 300 துரித அன்டிஜன் சோதனைகளையும் முன்னெடுக்கின்றோம். இவற்றில் இரண்டு வீதத்துக்கும் குறைவானவர்களே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதால் கோவிட் வைரஸ்
மீண்டும் தலைதூக்கலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam