கடந்த நான்கு நாட்களில் கொழும்பில் ஏற்பட்ட மாற்றம்!
கொழும்பு மாநகரில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் கோவிட் தொற்றால் எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகக் கொழும்பில் ஐந்து நோயாளிகளே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் நாங்கள் 220 பி.சி.ஆர். சோதனைகளையும், 300 துரித அன்டிஜன் சோதனைகளையும் முன்னெடுக்கின்றோம். இவற்றில் இரண்டு வீதத்துக்கும் குறைவானவர்களே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதால் கோவிட் வைரஸ்
மீண்டும் தலைதூக்கலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 15 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri