நாட்டில் வன்முறைகளை தூண்ட அரசாங்கம் முயற்சி – அனுரகுமார
அரசாங்கம் இன மற்றும் மத வன்முறைகளை தூண்டுவதற்கு முயற்சிப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் இருப்பிற்காக அரசாங்கம் இவ்வாறு சூழ்ச்சி செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் சில தொலைக்காட்சி அலைவரிசைகள் இன, மத முரண்பாடுகளை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரம்
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தற்பொழுது இணைந்து கொண்டுள்ளதாகவும், 75 ஆண்டுகளாக நாட்டை சீரழித்த ஆட்சியாளர்களை அவர்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கண்டு அரசாங்கம் அஞ்சுவதாகவும் இதனால் முரண்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, தெற்கு எனவும் சிங்களம், தமிழ் மற்றுமு; முஸ்லிம் எனவும் பிரித்தாள அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் இவ்வாறான சதி வலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |