மட்டக்களப்பு பிரதேசத்தில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள் உள்ள சமுர்த்தி வங்கியில் கடமையாற்றி வரும் 15 பேர் உட்பட புளியந்தீவு பிரதேசத்தில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புளியந்தீவு பிரதேசத்தில் 35 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே இவ்வாறு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த காரியாலயம் மற்றும் புளியந்தீவு பொது சுகாதார காரியாலயத்தில் இன்று 111 பேருக்கு எழுமாறாக அன்டிஜன் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள் இயங்கி வரும் சமுர்த்தி வங்கியில் கடமையாற்றி வருகின்ற 15 பேருக்கும், புளியந்தீவு பகுதியிலுள்ள 20 பேர் உட்பட 35 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை,கோவிட் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லாத நிலை காரணமாக தொற்று கண்டறியப்பட்டவர்களை அவர்களது வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan