வலிகாமம் மேற்கில் கோவிட் விழிப்புணர்வு அறிவித்தல்
தற்போது கோவிட் தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துச் செல்லும் நிலையில், நாட்டின் அனைத்து பாகங்களிலும் பரவலாக கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் நேற்று (2021.06.08) வலிகாமம் மேற்கு பிரிவிற்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அறிவித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உலக சுகாதார மையத்துடன் இணைந்து ஏ.டி.ஐ.சி நிறுவனம், சங்கானை பிரதேச இளைஞர்
கழக சம்மேளனம், ஜடாயு தன்னார்வ அமைப்பு மற்றும் பிரதேச சபை உறுப்பினர்
க.இலங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து இந்த விழிப்புணர்வு அறிவித்தல் நடவடிக்கையை
மேற்கொண்டனர்.