பட்டதாரி ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
நாட்டில் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
மாகாணத்தின் பெயருக்கு ஏற்ப விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பிரதான பாடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.
தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம்
மேலும், எதிர்காலத்தில் இதற்கான ஆட்சேர்ப்பு மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.
எனினும், தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும்." எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
