யாழ்.மாநகர சபை முடிவினால் ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை
யாழ். ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆளுநரின் முடிவு அப்பகுதி மக்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு அனுமதிக்காவிட்டால் யாழ்.மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன்டு ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநரால் கட்டளையிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழி ஊடாக சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன், சபை கலைக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றும், சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், முறைப்படி எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்தால் வேறு வழிகள் குறித்து பரிசீலனை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பிலான ஆளுநரின் செயற்பாடு அப்பகுதி மக்களிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா Cineulagam

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
