கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் குறித்து ஆளுநர் முன்வைத்த கருத்து
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியின் நிறைவும், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் கௌரவிப்பும் முகமாலையில் புதன்கிழமை (18.06.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், "கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலராக 2003ஆம் ஆண்டு இணைந்துகொண்டதிலிருந்து மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நான் பணியாற்றியிருக்கின்றேன்.
முக்கிய பணி
அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாகக்கருதுகின்றேன். தங்கள் உயிரை துச்சமாக மதித்து இந்தப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். முகமாலை பிரதேசம் கடந்த காலத்தில் போரின் எச்சங்களை வைத்திருந்தது.
ஹலோ ட்ரஸ் நிறுவனம் மகத்தான சவால்களை எதிர்கொண்டு மேற்கொண்ட அவர்களின் கடினமான முயற்சிகள், நமது மக்களின் பாதுகாப்பான மீள்குடியேற்றத்துக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களின் மறுமலர்ச்சிக்கும் வழி வகுக்கின்றன. இந்த நிலத்தை தரிசாக வைத்திருக்கும் மற்றும் அதன் மக்களை காத்திருக்க வைக்கும் மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அகற்ற ஹலோ ட்ரஸ், பெரும்பாலும் ஆபத்தான சூழ்நிலைகளில் அயராது உழைத்து வருகிறது.
இது வெறும் நிலத்தை சுத்தம் செய்வது பற்றியது மட்டுமல்ல, நம்பிக்கையை கட்டியெழுப்புவது பற்றியது. இது குடும்பங்களுக்கு தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பவும், தங்கள் வயல்களை மீண்டும் பயிரிடவும், தங்கள் குழந்தைகளை பயமின்றி விளையாட அனுமதிக்கவும் நம்பிக்கையை அளிப்பதாகும். " என குறிப்பிட்டார்.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
