அரச ஊழியர்களுக்குத் தொடர் அச்சுறுத்தல்! அநுர அரசு மீது நாமல் குற்றச்சாட்டு
எதிரணிகள் மற்றும் அரச ஊழியர்களை அச்சுறுத்தி, ஒடுக்கி ஆட்சியை முன்னெடுப்பதற்கு அநுர அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksha) குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்கியது.
அதனை தற்போது நிறைவேற்ற முடியாதுள்ளதால் நாடாளுமன்றத்தில் எதிரணியையும், வெளியில் அரசாங்க ஊழியர்களையும் அச்சுறுத்தல் மூலம் ஒடுக்கி ஆட்சியை நடத்தப் பார்க்கின்றது.
பொலிஸாருக்கு இடமாற்றம்
ஜனாதிபதி அண்மையில் பொலிஸ் ஆணைக்குழுவை விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து 139 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த அரசியலையே தற்போது நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. தமது அரசியல் தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இவ்வறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam