அரச ஊழியர்களுக்கான விடுமுறை: வெளியானது விசேட சுற்றறிக்கை
விசேட சந்தர்ப்பத்திற்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தொடர்பில் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அதிகபட்சமாக 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்
இந்த விடுமுறைக்காக விண்ணப்பிக்க, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது 10 மாதங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் உண்மையான நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நிரந்தர அரசாங்க ஊழியர் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பதற்காக அதிகபட்சமாக 4 மாதங்களுக்கு ஊதிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு மற்றும் ஊதியம் இல்லாத விடுமுறை என விடுமுறை எடுக்க முடியும்.
இந்த சுற்றறிக்கையானது இந்த ஆண்டு ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan
