அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
கடன் அடிப்படையில் அரச நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மீறும் அரச அதிகாரிகள் அதற்கான செலவுகளை தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இதேவேளை, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுக்கான மதிப்பீட்டை ஜனாதிபதி சமர்ப்பித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
