ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான ஆடைகள் தொடர்பில் கோரிக்கை
அரசாங்க ஊழியர்கள் அரச சேவையின் கௌரவத்தை பேணும் வகையில் பொருத்தமான ஆடை அணிந்து செல்வது குறித்த அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலை ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் கூடுதல் விலைக்கு சாரிகளை கொள்வனவு செய்து அணிய முடியாது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சாரி, ஒசரியை விட எளிமையான ஆடைகள்
போக்குவரத்து பிரச்சினை காரணமாக அநேகமான ஆசிரியர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பணியில் ஈடுபடும் போது சாரி, ஒசரி போன்ற ஆடைகளை விடவும் எளிமையான இலகுவான ஆடைகள் கடமையாற்றுவதனை வசதியாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
