பாதிக்கப்படும் விவசாயிகளை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது : ச.வியாழேந்திரன்
பெரும் போகத்துக்கான உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்ற இதே நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு ஒருபோதும் பின்னிற்காது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கேற்ப பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உளுந்து மற்றும் பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது. நாட்டின் ஜனாதிபதி ஒரு நல்ல நோக்கத்தோடு சேதன உரம் தொடர்பான விடயத்தை கையிலெடுத்து இருந்தார்.
ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மக்களுக்காக அரசாங்கம் என்ற கொள்கைக்கு அமைவாக இத்திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் தற்போது இராசயன உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்துள்ளனர்.
ஆகவே ஏற்கனவே விவசாயத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான இழப்பீட்டை அரசு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
பெரும் போகத்தில் இவ்வாறான ஒரு வாய்ப்பை வழங்கிய அரசாங்கம் இதுபோன்று பாதிக்கப்படும் விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது.
மக்கள் தலைவர்கள் எங்கள் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்வது இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிந்திக்கவேண்டும்.
குறிப்பாக தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று சொன்னவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயிருக்கின்றார்கள்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரே பல அரசியல்வாதிகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் அப்படியல்ல யுத்தத்தின் வலிகளை அனுபவித்தோம் பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு என்ன திட்டம் எங்களிடம் உள்ளது மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன திட்டம் உள்ளது சலுகைகளுக்காக விலை போக மாட்டோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம், நாடாளுமன்றத்தில் வழங்கும் சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டே இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி News Lankasri

லண்டனில் இரயில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் News Lankasri

மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ Cineulagam

துப்பாக்கிச்சூட்டுக்கு முன் ஜேர்மனியில் வாழும் ’காதலிக்கு’ குறுஞ்செய்தி அனுப்பிய அமெரிக்க தாக்குதல்தாரி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் தில்லையம்பலம்
குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி
27 May, 2021
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022