அரசின் பயணத்தை தடுப்பதற்கு சுதந்திரக்கட்சி தயாரில்லை! - அமைச்சர் தகவல்
"அரசின் காலை வாருவதற்கும், பயணத்தைத் தடுப்பதற்கும் நாம் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"இந்த அரசு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நாமும் அரச பங்காளிகள்தான். வெற்றியில் எமக்கும் பங்குண்டு.
எனவே, அரசின்
பயணத்தைத் தடுப்பதற்கும், காலை வாருவதற்கும் நாம் தயாரில்லை.
அரசு தவறான திசையில் பயணிக்குமானால் அதனைத் தைரியமாகச் சுட்டிக்காட்டும் உரிமை
எமக்கு இருக்கின்றது" என கூறியுள்ளார்.