இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரை நிகழ்த்திய அவர்,நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் கல்வித்துறையில் அரசியல் தேவைக்கு ஏற்றால் போல் திருத்தங்கள் முன்வைக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், முன்பள்ளி நிர்வாகங்கள் இராணுவத்திற்கு கீழ் செயற்படுகின்றமை உலகில் இல்லாத வழக்கம் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இதுவே ஆசியாவின் ஆச்சரியம் என கேலி செய்துள்ளார்.