உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பாம் பயிர்ச்செய்கை உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி கடந்த பெப்ரவரியில் உத்தரவிட்டிருந்தார். காலியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாம் பயிர்ச்செய்கை சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாம் பயிர்ச்செய்கை காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று ஜனாதிபதியிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.