நீர்க்கட்டணம் செலுத்த நிவாரண காலம் வழங்கும் அரசாங்கம்
பயண கட்டுப்பாடு காரணமாக நீர் கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு மேலதிகமாக ஒருமாத காலம் நிவாரண வழங்கவுள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் நீர் கட்டணம் செலுத்துவதற்கு நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர், நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு மாத காலம் வரையான நிவாரண காலத்தை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன் இந்த காலப்பகுதியில் சிலருக்கு நீர் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமையும் இருக்கலாம். அதனால் நீர் கட்டணம் செலுத்த முடியாமல்போனவர்களது நீர் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது. அவ்வாறானவர்கள் தொடர்பாகவும் நாங்கள் அவதானம் செலுத்துவோம்.
அதேபோன்று கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய காரணத்துக்காக, தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்காகவும் நீர் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.