இலஞ்சம் பெற்ற சீதாவக்கை நகர சபை அதிகாரிகள் கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் அவிசாவளை - சீதாவக்கை நகரசபையின் அதிகாரிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக வளாகத்தில் கடையொன்றை வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் நான்கு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
சம்பந்தப்பட்ட கடையை வர்த்தகரிடம் ஒப்படைத்து வியாபாரப் பங்குதாரரின் மறைவுக்குப் பின் அவரது பங்குதாரருக்கு ஒப்படைக்கும் வகையில் உரிய ஆவணங்களை விரைவாகத் தயாரிப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாவை முறைப்பாட்டாளரான வர்த்தகரிடம் சந்தேக நபர்கள் கோரியுள்ளனர்.
குறித்த வர்த்தகர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சீதாவக நகரசபையின் செயலாளர் மற்றும் வரி வசூலிப்பவர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
