பதவி விலக தயாராகும் அரச நிறுவனங்களின் பிரதானிகள்
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் உட்பட அரச நிறுவனங்களின் பிரதானிகள் தமது பதவிகளில் இருந்து விலக தயாராகி வருவதாக தெரியவருகிறது.
நிறுவனங்களை நடத்த முடியாத நிலைமை

பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்தும் நிறுவனங்களை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக நிறுவனங்களின் பிரதானிகள் சிலர், அரச உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு

எரிபொருள் மற்றும் அத்தியவசியமான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக பல அரச நிறுவனங்களை கொண்டு நடத்த முடியாத சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், நிறுவனங்களின் பிரதானிகள் விரக்தியிலும் செய்வதறியாதும் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல நிறுவனங்களில் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri