அரசாங்கம் தீர்வினை தராது சர்வதேசமே தலையிட வேண்டும்: வவுனியாவில் தொடரும் போராட்டம்(Photos)
அரசாங்கம் தீர்வினை தராது சர்வதேசமே தலையிட வேண்டும் என வவுனியாவில் ஐந்து வருடங்களைக் கடந்து தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் குறித்துக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நேரடியாக வந்து இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.
இன்று எமது போராட்டத்தை வெளிநாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர். நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம்.
வவுனியாவில் கடந்த 1847ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வருகின்றோம்.
தற்போது இடம்பெற்றுவரும் ஐநா சபை மாநாட்டில் எங்களுக்குத் தீர்வு கிடைக்கும்,
எங்களுடைய பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்
இருக்கின்றோம். எத்தனை வருடங்கள் கடந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை எமது
போராட்டம் தொடரும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.









ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
