அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம்
அத்தோடு, அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மார்ச் 6 ஆம் திகதிக்குள் குறித்த திருத்தம் செய்யப்படாவிட்டால், மார்ச் 7 ஆம் திகதி முதல் கடுமையான முடிவுகளை எடுக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam
