மருத்துவர்களிடம் அறவீடு செய்யும் வருமான வரியை குறைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை
மருத்துவர்கள் உள்ளிட்ட உயர் தொழிற்துறைகளில் ஈடுபடும் அதிகாரிகளிடம் அறவீடு செய்யப்படும் வருமான வரியை தொகையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa), அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், பிரதமர் மஹிந்தவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்பொழுது அறவீடு செய்யப்படும் 24 வீத வருமான வரி அறவீட்டை 12 வீதமாக குறைக்குமாறு கோரியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் வரி அறவீட்டுத் தொகை 12 வீதமாக காணப்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கமே 24 வீதமாக உயர்த்தியது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam