ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரச தொழில்வாய்ப்பு! அமைச்சரவை அங்கீகாரம்
5,800க்கும் அதிகமானவர்களை புதிதாக அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் துறைமுகங்கள், சிவில் விமான சேவை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கு 909 பேரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சுக்கு 109 பேரும், சுற்றாடல் அமைச்சுக்கு 144 பேரும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சுக்கு 2500 பேரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சுக்கு 22 பேரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு185 பேரும், கடற்தொழில், நீரியல் வளங்கள் அமைச்சுக்கு 20 பேரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு 1615 பேரும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

மேலதிக நியமனம்
அவர்களுக்கு மேலதிகமாக ஊவா மாகாண சபைக்கு 303 பேரும், மத்திய மாகாண சபைக்கு 72 பேரும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri