இயலாமையை மூடி மறைக்க முயற்சிக்கும் அரசாங்கம்
அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய தயாராகி வருகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva)தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் குறித்து பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை மாற்றுவதால், வீழ்ந்து போயுள்ள நாட்டை தற்போதைய அரசாங்கத்தினால், கட்டியெழுப்ப முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் திருடர்கள் அனைவரையும் விரட்டியடித்து விட்டு, மக்கள் சார்பான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
நாட்டிற்கு இந்த சந்தர்ப்பத்தில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. தோல்வியான ஆட்சியாளர்களிடம் இருந்து மக்கள் விடுப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக தெளிவான வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது.
மக்கள் வரிசைகளில் நிற்கும் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து, எதிர்கால சந்ததியினர் அனர்தத்திற்குள் செல்ல இடமளிக்காத அரசாங்கம் ஒன்றின் ஆட்சியை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan