வலிகாமம் வடக்கில் விடுவித்த காணியை அபகரிக்கும் முயற்சியில் அரசு
யாழ். வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் - நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பகுதியில், கடற்படைக்கு றேடர் அமைக்கும் நோக்குடன் 2 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வலிகாமம் வடக்கு பகுதியில் அண்ணளவாக 300 ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது.
இவ்வாறிருக்கையில், இந்த பகுதிகளுக் மேலதிகமாகவே தற்போதைய சுவீகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான பகிரங்க அறிவித்தல் தெல்லிப்பழை பிரதேச செயலாளரால் விடுக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு
வலிகாமம் வடக்கில், காணிகளை விடுவிப்பதாக அநுர அரசு மீண்டும் மீண்டும் கூறுகின்ற போதிலும், வாக்குறுதிக்கு அமைய எந்தவொரு விடுவிப்பு நடவடிக்கைகளும் இதுவரை இடம்பெறவில்லை.
அத்துடன், விடுவிக்கப்பட்டாகக் கூறப்படும் காணிகள் பலவற்றில் இருந்து இன்னமும் கடற்படை வெளியேறாத நிலையும் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், தற்போது கடற்படைக்கு றேடர் அமைக்கும் நோக்குடன் மேலும் 2 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
