சனத் ஜயசூரியவிற்கு எந்த அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் விளக்கம்
முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரியவிற்கு எந்த அடிப்படையில் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்றைய தினம் அமைச்சர் ரமேஸ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
பக்கச்சார்பான அடிப்படையில் கோவிட் தடுப்பூசி சிலருக்கு வழங்கப்படுகின்றதா எனச் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
கோவிட் தடுப்பூசி தொடர்பில் மக்களுக்குக் காணப்படும் அச்சத்தை நீக்கும் நோக்கில் இவ்வாறு பிரபல்யமானவர்கள் சிலருக்குத் தடுப்பூசி ஏற்றப்படுவதாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தைச் சமநிலையாக நோக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நட்புறவின் அடிப்படையில் எவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri