அரச ஊழியர்களுக்கு 50ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம்! அநுர அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 50 ஆயிரம்ரூபா வரை உயர்த்துமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போது 24,250 ரூபாவாக இருந்த அடிப்படைச் சம்பளம், 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
அதற்காக 15,750 ரூபா சம்பள அதிகரிப்பும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போதைய விலைவாசி உயர்வின் காரணமாக இந்தச் சம்பளம் செலவுகளைச் சமாளித்துக் கொள்ளப் போதுமானதாக இல்லாத காரணத்தினால், அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சமாக 50 ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.





வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
