அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
இந்த ரமழான் பண்டிகை போது முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தொடர்பான விடயங்கள்
இந்த சுற்றறிக்கையில்,சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதிகாரிகள் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக முன்பணத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரமழான் பண்டிகை மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you my like this video

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri
