அரச ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா: அரசாங்கம் தீர்மானம்
அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வருட தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவு நிதி நிவாரணம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு தாம் பாடுபடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, அனைத்து மக்களும் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதை தாம் நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
