யாழில் அரச பேருந்தொன்றின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்
யாழ். பொன்னாலையில் அரச பேருந்தொன்றின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(17.08.2025) இடம்பெற்றுள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
நேரப் பிரச்சனை
இதன்போது, பொன்னாலை சந்தியில் குறித்த பேருந்தை வழிமறித்து, பேருந்தின் சாரதி மீதும் நடத்துனர் மீதும் தனியார் பேருந்து சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
நேரப் பிரச்சனை காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த அரச பேருந்தின் சாரதியும் நடத்துனரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட குறித்த தனியார் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



