அரசின் அஸ்வெசும கொடுப்பனவின் எதிரொலி! வீதிக்கு இறங்கிய மக்கள்(Video)
அரசின் அஸ்வெசும கொடுப்பனவை வழங்குமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று (27.06.2023) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு சமுர்த்தி வங்கிக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மூங்கிலாறு,உடையார்கட்டு குரவில் மற்றும் தேராவில் கிராமங்களை சேர்ந்த மக்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மனு கையளிப்பு
போராட்டத்தின் போது, ஏழைகள் வாழ்வை ஏழனம் செய்யாமல் எங்களை
உள்வாங்கு,வேண்டும் வேணடும் அஸ்வெசும,அரசே அஸ்வெசும திட்டத்தில் அனைவரையும்
உள்வாங்கு,ஜனாதிபதியே தகுதியான எங்களையும் உள்வாங்கு என்று பல்வேறு
வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளனர்.
கவனயீர்ப்பினை தொடர்ந்து, கிராம மட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சிலர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் சென்று அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்திடமும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனஸே்வரனிடமும் மக்களின் கோரிக்கை அடங்கிய மனுவினை கையளித்துள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் அரசாங்கத்தின் நலன்புரித் உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு ஏற்படுவதை எதிர்த்து ஓட்டமாவடி- கொழும்பு வீதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகம் கோறளைப்பற்று மத்தி முன் பிறைந்துறைச்சேனை 204 ஏ பிரிவு சமூர்த்தி பயனாளிகளால் ஆர்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடிய மக்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக ஓட்டமாவடி, கொழும்பு பிரதான வீதி வழியாக பிரதேச செயலகம் வரை நடந்து சென்றனர்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைஸ் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து கொடுப்பனவு கிடைக்கதாவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என்றும் மேன் முறையீடு செய்வதற்காக அலுவலகத்தில் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் உடனடியாக விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-நவோஜ்
செங்கலடி
அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி செங்கலடி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கலடி பிரதான வீதியில் இருந்து செங்கலடி பிரதேச செயலகம் வரை பேரணியாக கையில் பதாதைகளை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரியும் முறையற்ற பட்டியல் தயாரிப்பை மீள் பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறுதியாக வருகை தந்த செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவிபிரதேச செயலாளர் நிருத்தா பிருந்தனிடம் தமது பிரச்சினைகளை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
