தேர்தலை நடத்த போதியளவு பணமில்லை! அரசாங்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என தாம், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் கேட்டதாகவும், அதற்கு போதியளவு பணமில்லை என பதிலளித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு
இந்த நிலைமை குறித்து உயர் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நிதி இல்லாத காரணத்தினால் வேட்பு மனுக்களை அச்சிட முடியவில்லை என அரச அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan
