பிரபல மருத்துவர் எலியந்த வைட்டிற்கும் கோவிட் தொற்று
பிரபல மருத்துவர் எலியந்த வைட்டிற்கு கோவிட் தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆன்மீக சிகிச்சை முறையில் மிகவும் பிரபல்யமான டொக்டர் எலியந்த வைட் கோவிட் தொற்றுக்கு இலக்காகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டொக்டர் எலியந்த வைட், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டொக்டர் எலியந்த வைட், கோவிட் தொற்றை ஒழிப்பதற்காக புனித நீர் அடங்கிய பானைகளை அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா உள்ளிட்ட சிலருடன் இணைந்து கங்கைளில் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியிருந்தது.