”எரியும் பிரச்சினையை ஏறெடுத்தும் பார்க்காத” ஜனாதிபதி கோட்டாபய!(காணொளி)
கடந்த வாரத்தின் மூன்று நாட்கள், ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கை விளக்க உரைக்கான, விவாதங்கள் நாடாளுமன்றில் இடம்பெற்றன
இதன்போது அவர் இலங்கையை பற்றி பேசினாரா? அல்லது வெளிநாடு ஒன்றை பற்றி பேசினாரா? என்பது போன்ற கடும் விமர்சனங்கள் தொடுக்கப்பட்டன.
அவரின் உரை, தமிழ் கட்சிகளால் நிராகரி்க்கப்பட்டது.
இனப்பிரச்சினை தொடர்பாக அவர் எதனையும் கூறவில்லை என்பதே இதற்கான காரணம்.
அதேவேளை நாட்டில் எரிந்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதி கண்டுக்கொள்ளவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தின.
எனினும் அரசாங்க கட்சி, கோட்டாபயவை புகழ்ந்து பேசியது.
இந்த விடயங்களும் ஏனைய விடயங்களும் அடங்கிய வாராந்த காணொளி இதோ!