விமல் வீரவன்சவின் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்: நிராகரிக்கும் அமெரிக்க தூதரகம்
உத்தர லங்கா சபையின் தலைவர் விமல் வீரவங்சவின் கருத்துக்கள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த வாரம் குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை முயற்சி
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில், நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர் அவரை கொலை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக விமல் வீரவன்ச, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த செயற்பாட்டுக்கு அமெரிக்காவின் தூதுவரும் பங்காக இருந்தார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
குழப்பத்திலுள்ள கோட்டாபய
இந்த குழப்பமான தகவல்களை வெளியிட்டதையடுத்து, இந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த கருத்தை அமெரிக்க தூதரகம் முழுமையான குப்பை என்று நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.