கோட்டாபயவின் வருகையால் ரணிலுக்கு ஏற்படும் கடும் நெருக்கடி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையினையே ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையினையே ஏற்படுத்தும்.
சர்வதேச நாணய நிதியம்

"சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்குச் சில காலங்கள் எடுக்கலாம்.
இதற்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு பக்கங்களில் இலங்கைக்குள் தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றனர்.
இவற்றையெல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்நோக்கும் போது கோட்டாபய நாடு திரும்புகின்றார்.
கோட்டாபயவின் வருகை

இந்நிலையில் கோட்டாபயவுக்காக ரணில் என்ன செய்தாலும் விமர்சிக்கப்படுவார்.
பொதுமக்களில் பெரும்பாலானோர் ரணிலைக் கோட்டாபயவின் மனிதராகவே கருதுகின்றனர்.
எனவே, ரணில் துக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அவர் ஒரு
புத்திசாலி அரசியல்வாதி. இந்தத் தந்திரமான பிரச்சினையைத் துணிச்சலுடன்
சமாளிப்பார்" என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam