கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் நடந்த அநியாயங்கள்...
'அரகலய' போராட்டத்தின் பின்னர் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் பெனிசுலா ஹோட்டலில் (The Peninsula Excelsior Hotel in Singapore) தங்கியிருக்கும் போது மூன்றாம் ஒரு நாட்டின் அழுத்தத்திலேயே பதவி விலகலுக்கான கடிதத்தை சமர்ப்பித்தார்.
அவர் பதவி விலகுவதற்கான எவ்வித தீர்மானத்தையும் எடுத்திருக்கவில்லை என அசங்க அபேகுணசேகர (Asanga Abeyagoonasekera) தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த இரகசிய நகர்வுகள்
இவர் பூகோலவியல் அரசியல், சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர், வருகைத்தரும் விரிவுரையாளர்,மேலும் முன்னாள் அரசியல்வாதி ஒசி அபேகுணசேக்கரவின் (Osi Abeyagoonasekera) மகனாவார்.
அரகலய போராட்டத்தின் போது மறைக்கப்பட்ட பல உண்மைகளை வின்ட்ஸ் ஒப் சேன்ஜ் (Winds of Change) (The Millennium Project, USA) என்ற ஆங்கில நாவலில் இது தொடர்பான பல தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அந்த நாவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
அந்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அன்றைய நிலையில் கோட்டாபய முதலில் மலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து தாய்லாந்து செல்கிறார்.

இந்த பயணத்திற்கு உத்தியோகப்பூர்வமற்ற நிலையில் இந்தியாவே அவருக்கு உதவி செய்தது.சிங்கப்பூர் பெனிசுலா ஹோட்டலில்(The Peninsula Excelsior Hotel in Singapore) பதவி விலகல் கடிதத்தை வெளிநாட்டு பாதுகாப்பு துருப்புகளே பெற்று கொள்கிறது.
இந்த இரகசியங்கள் தொடர்பில் சிங்கப்பூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களை அசங்க அபேகுணசேகர இவ்வாறு கூறுகிறார்.
'வெளிநாடு ஒன்று கோட்டாபய ராஜபக்சவுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கிறார்' இந்திய 'ரோ' புலனாய்வுத் துறை இறந்த எலியில் இருந்து வரும் துர்நாற்றத்தை போன்றதாகும் என குறிப்பிடும் அவர் இந்த திட்டம் 'ரோ'விக் செயற்பாடு தான் என குறிப்பிடுகிறார்.

அவரின் கருத்துப்படி இந்தியா முன்னிலையாகியே கோட்டாபயவுக்கான அனைத்து பாதுகாப்பையும் வழங்கியது.எனது கருத்துப்படி ரோ முன்னிலையாகவில்லை என்றால் கோட்டாபய பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வந்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.