இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஜனாதிபதி செயலம் - பிரித்தானியா வெளியிட்ட தகவல்
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்ட களத்திற்குள் இராணுவத்தினர் நுழைந்து போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்கதல் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுவும் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியா கண்டனம்
Very concerned about reports from the Galle Face protest site. We have made clear the importance of the right to peaceful protest
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) July 21, 2022
இதேவேளை, காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹோல்டன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் இடம்பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைதிப் போராட்டத்திற்கான மக்களின் உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் புதியதாக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதாக அவர் நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
