முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தின் புலனாய்வாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர், அக்கடற்படைத்தளத்தில் உள்ள அவரது படுக்கையறையில் நேற்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பதுளையை சேர்ந்த டபிள்யு.எம்.எல்.பி. வணசிங்க என்ற கடற்படை வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இன்று (17.04.2023) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளையினை சேர்ந்த குறித்த கடற்படை வீரர் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் 15.04.23 அன்று இரவு நித்திரைக்கு சென்ற நிலையில் 16.04.23 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை ஆரம்பம்
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன்
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.