கோட்டாபயவை கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவினை சிங்கப்பூர் அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்முனைப்பு தற்போது பல முனைகளில் இருந்து வலுப்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசேட ஊடக அறிக்கை ஒன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது நிலை கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை பாதுகாப்பாக நாட்டுக்கு மீண்டும் அழைத்துவர ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் கோட்டாபயவை இலக்கு வைத்து வெளிநாடுகளில் சட்ட ரீதியான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகிறதா என இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி.சில்வா தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
கோட்டாபய மீது ஆதாரமற்ற போர்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அவருக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் அறிக்கை
கோட்டாபய இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்பு கூறல் இன்னும் இல்லை என ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
குற்றங்கள்
சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காத போதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழிசமைக்கின்றது.
இந்தக் கொள்கை மூன்றாம் உலக நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது.
வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்குட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.
இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் அரசு நிறுத்த வேண்டும் என்ற
கோரிக்கையினை வலுவாக முன்வைத்திருந்தது.
கவனயீர்ப்பு போராட்டங்கள்
சிங்கப்பூர் தூதரகங்கள் முன்னால் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்த நா.தமிழீழ அரசாங்கம், சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி கையெழுத்து போராட்டத்தினையும் தொடங்கியிருந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முனைப்பு விரிவாக்கம் பெற்று, தற்போது தென்னாபிரிக்காவினை தளமாக கொண்டு இயங்கும் ஜஸ்மின் சுக்கா அவர்களது தலைமையில் இயங்கும் உண்மை மற்றும் நீதித்திட்டம் அமைப்பு, தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் உட்பட பல தரப்பினரும் சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இவையே ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி.சில்வா அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.