கோட்டாபயவின் பொருளாதார ஆலோசகருக்கு அநுர அரசாங்கம் வழங்கிய பதவி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக கடமையாற்றிய துமிந்த ஹுலங்கமுவ புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் சிரேஸ்ட பொருளாதார ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணி என்ற கட்சியின் சார்பில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் இந்ரானந்த டி சில்வா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மெதிரிகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் ஆலோசனை குழுவின் பெயர் பட்டியலில் 12ஆம் இடத்தில் இருப்பவர்தான் இந்த துமிந்த என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவை சுற்றியிருந்து, நாட்டையும் விவசாயிகளையும் நெருக்கடிக்குள் தள்ளிய ஊதாரிகளுக்கு அநுர அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
துமிந்த ஹுலங்கமுவ இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.

கோட்டாவின் அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகராக பதவி வகித்த ஹுலங்கமுவ, அநுர அரசாங்கத்தில் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என இந்ரானந்த டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri